நியூமராலஜிப்படி பெயர் மாற்றம், எழுத்து மாற்றத்திற்கு ஏற்ற எண்ணெழுத்து சக்தித் தலம் பேரளம். பொதுவாக பிறந்த நட்சத்திரங்களை ஒட்டி, ஆத்மசக்தியுடன் பெயர்கள் வைக்கப் பெற்றிருந்தால் அந்தந்த நட்சத்திர தேவதா மூர்த்திக்கான முறையான வழிபாடு இல்லாமலும், தக்க உத்தமப் புனிதர்களின் உத்தரவு இல்லாமலும் மற்றும் ஆன்மிகக் காரணம் இல்லாமலும் அவரவர் இஷ்டத்திற்கோ, பிறரின் தவறான ஆலேசானையின்படியோ பெயரையோ, பெயரின் எழுத்துக்களையோ மாற்றுதல் முறையல்ல. குழந்தை பிறந்தவுடன் வீட்டில் பெயர் சூட்டும் வைபவம் நிகழ்ந்திருந்தாலும், இதன்பிறகு பேரளம் கோயிலில் முறத்தில் பெயரை எழுதி நாமசக்தி அருளைப் பெற்றிடுங்கள்.