ஒளி மண்டலத்தின் இடையில் வீற்றிருப்பவரும், முக்கண்ணரும், அழகிய ஆடையினால் அலங்கரிக்கப்பட்டவரும், புஷ்பபாணம் கரும்புவில் மாணிக்க மயமான பாத்திரம் அபய முத்திரை இவைகளை மலர் கரங்களால் தரித்துக் கொண்டிருப்பவரும், மத யானை மீது அமர்ந்திருப்பவரும், வேண்டிய வரங்களை வழங்குபவரும், மூன்றுலகங்களையும் மோஹிக்கச் செய்கின்றவருமான மோஹன சாஸ்தாவை வணங்குகின்றேன்.