பதிவு செய்த நாள்
17
நவ
2017
11:11
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாடு நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில் நேற்று முன் தினம், பிரதோஷ பூஜை நடந்தது. சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிருதம், அரிசிமாவு அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார பூஜைக்கு பின், மாலை, 6:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளிய காசிவிஸ்வநாதர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், சிவலோகநாதரையும், நந்தியையும் பக்தர்கள் வழிபட்டனர். கிணத்துக்கடவு சிலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவலோகநாத உற்சவ மூர்த்தி, நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து, அருள்பாலித்தார்.- நிருபர் குழு -