பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
ஊத்துக்கோட்டை: கார்த்திகை மாதத்தை ஒட்டி, சபரிமலை அய்யப்ப சுவாமிக்கு, மாலை அணிந்து விரதமிருக்க, கடைகளில் விற்கப்படும் துளசி, சந்தன மாலைகளை, பக்தர்கள் வாங்கிச் சென்றனர். கேரள மாநிலத்தில், சபரிமலையில் வீற்றிருக்கும் அய்யப்ப சுவாமிக்கு, கார்த்திகை முதல் நாள், பெரும்பாலான பக்தர்கள் துளசி, சந்தன மாதிருவண்ணாமலை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி: கலெக்டர் அறிவிப்புலைகள் அணிந்து, பக்தியுடன் விரதம் இருப்பர். இன்று, கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில், துளசி, சந்தனம் உள்ளிட்ட வெவ்வேறு வகை மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதே போல, கறுப்பு, நீலம், ஆரஞ்சு வண்ண வேட்டி மற்றும் சட்டைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளன. இன்று முதல், அய்யப்ப பக்தர்களின் பஜனை பாடல்களுடன், சரண கோஷம் கேட்கும்.