பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆழ்வார் திருநகரி சுவாமி ஸ்ரீ நம்மாழ்வார் தேவஸ்தானத்தில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட தன்வந்தரி பெருமாளுக்கான, 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது.இங்கு, ஆதிநாதவள்ளி தாயார், குருகூர் வள்ளி தாயார் சமேத பொலிந்து நின்ற ஆதிபிரான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தன்வந்தரி பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது.