பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில் 15 நாட்களில் ரூ. ஒரு கோடியே 34 லட்சத்து13ஆயிரம் கிடைத்து உள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ. ஒருகோடியே 34லட்சத்து, 13ஆயிரத்து 644, தங்கம் - 545கிராம், வெள்ளி- 4,420 கிராம், வெளிநாட்டு கரன்சி- 640 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலை கணக்கீட்டாளர் மாணிக்கவேல், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.