பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
கம்பம், கார்த்திகை முதல் நாளான இன்று முதல் சபரிமலை ஐயப்பன்கோயிலிற்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கத் துவங்குவர். அதையொட்டி கடந்த சில நாட்களாகவே காவிவேட்டி மற்றும் துளசி மணி மாலை வாங்க ஆர்வம்காட்டி வருகின்றனர். கேரளா, சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர ஜோதிக்கு கார்த்திகை 1ல் மாலையணிந்து பக்தர்கள் விரதம் துவக்குவர். தொடர்ந்து 40 நாட்கள் விரதமிருந்து கோயிலிற்கு இருமுடி கட்டி செல்வது வழக்கம். அதையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி கடைகளிலும், புதிதாக முளைத்த ரோட்டோர கடைகளிலும் காவி, நீல நிற வேட்டி மற்றும் துளசி மணி மாலை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இன்று காலை சுருளி அருவி மற்றும் முல்லையாற்றின் கரையோரங்களில் புனித நீராடி குருசாமிகளிடம் மணி அணிவர்.
* தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகே உள்ள கடைகள், பழயை பஸ்ஸ்டாண்டில் உள்ள காதி விற்பனையகங்களில் மாலை வாங்க ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். சந்தன துளசி, பூ துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம், நவரத்தினம், ஐயப்பன் டாலர், பவள மாலைகள் ரூ.120ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டன. கருப்பு, நீலம் காவி வேட்டி, துண்டுகளை வாங்கினர்.