திருத்தணி முருகன் துணை கோவில்களில் நவ., 30ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2017 12:11
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களான பாவாடை விநாயகர் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் ஆகிய கோவில்களில், 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களான பாவாடை விநாயகர் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் ஆகியவை திருத்தணி நகரத்தில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள், மூன்று மாதங்களாக நடந்தன. தற்போது, திருப்பணிகள் முடிந்து, 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. வரும், 30ம் தேதி, காலை, 9:30 மணிக்கு மேற்கண்ட இரு கோவில்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பகல், 11:30 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.