பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சித்தாஸ்ரமத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் மணிமண்டப மகா கும்பாபிஷேக விழா துவங்கியது. செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகர் சித்தாஸ்ரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 100வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மணி மண்டபம் அமைத்துள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது. விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு விசிறி சங்கர், மாசானமுத்து ஆகியோரின் சப்தாகம நாமாவளி பஜனை நடந்தது. தொடர்ந்து அன்னை ஓம் பவதாரினி தலைமையில் பகவானின் பாதுகை பூஜையும், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், கலச ஆவாஹனம், வேத பாராயணம், வேள்வி, பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து நடந்த சிறப்பு சப்தாகம நாமாவளி பஜனை அகண்ட நாம ஜெபத்தில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி., சேகர், சுந்தரமூர்த்தி சிவம், குளித்தளை ஐயர் மலை பிரணவானந்த சரஸ்வதி சுவாமிகள், தத்தகரி ஆனந்த சுவாமிகள், செத்தவரை மோன சித்தர் ஆசிரமம் சிவஜோதி மோனசித்தர், சிருங்கேரிஸ்ரீமடம் முத்ராதிகாரி ஈரோடு பத்மநாப ஐயர், மேல்சித்தாமூர் ஜீனகாஞ்சி மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி தொழிலதிபர் பிரேம்குமார், செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், விழா குழுவினர் டாக்டர் அசோகன், டாக்டர் மகேஸ்வரி, உமா உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 7:30 மணிக்கு பகவான் யோகிராம் சுரத்குமாரின் ஆஸ்ரம அறக்கட்டளை வாழ்நாள் அறங்காவலர் நீதிபதி அருணாச்சலம் தலைமையில் பகவானின் மணி மண்டப கும்பாபிஷேக விழா நடக்கிறது. கும்பாபிேஷகத்தை, அன்னை ஓம் பவதாரிணி நடத்தி வைக்கிறார்.