தமிழகத்தில் கார்த்திகை பிறந்தது: சபரிமலையில் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2017 10:11
சபரிமலை:தமிழ்நாட்டில் நேற்று கார்த்திகை பிறந்ததை தொடர்ந்து சபரிமலையிலும் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.கேரளாவில் நேற்று முன்தினமும், தமிழ்நாட்டில் நேற்றும் கார்த்திகை பிறந்தது. சபரிமலை நடை கடந்த 15-ம் தேதி திறந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து மண்டல கால பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் காலை 8:00 மணிக்கு பின்னர் குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் நேற்று கார்த்திகை பிறந்த நிலையில் சபரிமலையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரையிலும் அதிகமான கூட்டம் காணப்பட்டது. முன்னதாகவே மாலையிட்டு விரதம் இருந்த பக்தர்கள் இருமுடி கட்டி வந்த ஐயப்பனை தரிசனம் செய்தனர். காலையில் உஷபூஜை மற்றும் மதியம் உச்சபூஜையின் போது சுத்தம் செய்யும் பணிக்காக பக்தர்கள் தடுத்து நிறுத்தும் போது சோபானத்தில் அதிக கூட்டம் காணப்பட்டது. நேற்றும் சபரிமலையில் பகலில் நல்ல வெயில் அடித்தது. நேற்று முன்தினத்தை விட நேற்று மாலையில் பனி குறைவாக இருந்தது.