Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறிச்சியில் அரவான் திருவிழா நிறைவு ஆடியில் நடைசாத்தும் அம்மன் கோயில் ஆடியில் நடைசாத்தும் அம்மன் கோயில்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயக்கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ராயக்கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 நவ
2017
10:11

சென்னை: தர்மபுரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள கெட்டூர் மலைக் குகையில், பழமையான பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. தொல்லியல் ஆய்வாளர்கள், அறம் வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து, கெட்டூர் மலைப்பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: எழுத்துக்கள் தோன்றும் முன், மனிதர்கள், தங்களின் எண்ணங்களை ஓவியங்களாக பதிவு செய்தனர். அவற்றில், மலைக்குகைகளில் உள்ள ஓவியங்கள் மட்டுமே, நமக்கு கிடைக்கின்றன. கெட்டூர் குகைப்பகுதியில், செங்காவி மற்றும் வெள்ளை நிறத்தில், 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை, 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். அதிக அளவில், மயில்களும், அடுத்த நிலையில், யானையின் ஓவியங்களும் உள்ளன. யானையின் மீது அம்புக்குறி வரையப்பட்டுள்ளது. அது, அரசனையோ, தலைவனையோ குறிக்கும். மயில்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக, கெட்டூர் இருந்திருக்கலாம். நாகர், துளசி மாடம், குதிரையில் அமர்ந்து போரிடுவது போன்ற காட்சிகளும் உள்ளன. இப்பாறை ஓவியங்கள், பழங்கால மனிதர்களின் வாழ்வியல் சாட்சியாக உள்ளன. ஆனால், மலை அடிவாரத்தில், பல ஓவியங்கள் அழிந்தும், மறைந்தும் உள்ளன. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, தொல்லியல் துறையினர், ஓவியங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar