சிங்கம்புணரி: சிங்கம்புணரி செல்வவிநாயகர் கோயில் தெருவில் உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளையொட்டி படிபூஜை நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்தது. மாலை 7:00 மணியளவில் கோயிலில் உள்ள 18 படிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை வழிபட்டனர்.