பதிவு செய்த நாள்
18
நவ
2017
12:11
சேலம்: கார்த்திகை பிறப்பையொட்டி, ஐயப்பன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். மாலை, 5:00 மணிக்கு மண்டல பூஜை, 7:00 மணிக்கு படி பூஜை நடந்தது. சேலம் - பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில், காலை, 5:30 மணிக்கு கணபதி ?ஹாமம், 6:00 மணிக்கு நெய் அபி?ஷகம், அஷ்டாபி ?ஷகம், தீபாராதனை, 12:00 மணிக்கு நடை சாத்துதல், 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு, விரதத்தை துவங்கினர். டிச., 27ல் மண்டல பூஜை நிறைவு விழா, டிச., 28ல் மகரவிளக்கு பூஜை தொடங்கி, தொடர்ந்து, 19 நாட்கள் நடக்கின்றன. ஜன., 1ல், ஆங்கில புத்தாண்டு பூஜை, ஜன., 7 முதல், 14 வரை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
* ஆத்தூரில், வெள்ளை விநாயகர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாள் விரதத்தை தொடங்கினர். கறுப்பு, ஊதா, காவி வேட்டி அணிந்த பக்தர்கள், குருசாமி மூலம், மாலை அணிந்து கொண்டனர்.