பதிவு செய்த நாள்
21
நவ
2017
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழா, நேற்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் வழிபாட்டுடன் துவங்கியது.திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில், கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா வரும், 23ல், பஞ்சமி திதி, பூராட நட்சத்திரம், துலா லக்னத்தில் அதிகாலை, 4:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் சுவாமி தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்து, முதல் நாள் விழா தொடங்குகிறது.
10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவு பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதை தொடர்ந்து வரும், 29ல் ஏழாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவரும் மஹா ரத தேரோட்டமும், டிச.,2ல் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி, எவ்வித அசம்பாவிதம் நடக்க கூடாது என வேண்டியும், திருவிழாவிழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நேற்று நடந்தது. துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, துர்க்கையம்மன் காமதேனு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு நேற்று இரவு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து இன்று 21ல், அருணாசலேசுவரர் கோவிலில் பிடாரி உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடக்கிறது.