சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி 1008 சங்குகளைக்கொண்டுபூஜை செய்யப்பட்டது. சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரைக்கொண்டு சொக்கநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருபாலித்தார். சிவாச்சாரியார்கள் குமார், சுரேஷ் பூஜைகளை நடத்தி வைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆதித் திருத்தளிநாதர் கோயிலில் முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிேஷகம் நடந்தது.குன்றக்குடிதேவஸ்தானத்திற்குட்பட்ட கோயில்களில் மிகப் பழமையானதும் தொன்மை வாய்ந்தது ஆதி திருத்தளிநாதர் மேலக்கோயில். நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு108 சங்காபிஷேகம் நடந்தது.
மூலவர் சன்னதி முன்பாக நெல்லில் சிவலிங்க வடிவத்தில்சங்குகள் அடுக்கப்பட்டு பால், மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து பாஸ்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் மூலவருக்கு கலச புனித நீரால் சிறப்பு ஆராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.