பதிவு செய்த நாள்
21
நவ
2017
12:11
திருப்பூர்: திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, ஷீரடி சாய்பாபா கோவிலில், ஐந்தாம் ஆண்டு விழா, நாளை துவங்குகிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜை, நவகிரக பூஜை உள்ளிட்டவை; மதியம், 12:00க்கு, பகல் ஆரத்தி; மாலை, 6:00க்கு, துõப ஆரத்தி; 6:30க்கு, செண்டை மேளத்துடன், பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. இரவு, 7:30க்கு, பாண்டியன் நகர் சவுடேஸ்வரி அம்மன் பஜனை மற்றும் கோலாட்ட குழுவினரின் பஜனை; 9:00க்கு, சிறப்பு ஆரத்தி எடுக்கப்படும். பண்டிட் திகம்பர் பாலசாகீப் குல்கர்னி தலைமையில், பூஜை நடைபெறும். வரும், 23ம் தேதி காலை, 6:00க்கு சிறப்பு ஆரத்தி; 7:30 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:30க்கு, ‘ஷீரடி சாய் மகிமை’ என்ற தலைப்பில், சவுமியா அபிஷேக் ராஜூ சொற்பொழிவு நடக்கிறது. இரவு, 7:00க்கு, ‘சாயி நாதா சற்குரு நாதா’ என்ற தலைப்பில், சுகி சிவம், சொற்பொழிவு, 24ம் தேதி, மாலை, 4:00க்கு, சத்ய நாராயண பூஜை; 6:00க்கு, தேச மங்கையற்கரசியின் சொற்பொழிவும் நடக்கிறது.