பம்பையிலிருந்து சன்னிதானம் வரை 13 அவசர சிகிச்சை மையங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2017 12:11
சபரிமலை: பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள மலைப்பாதையில் 13 அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சுகாதாரப்பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. இதில் 3 கி.மீ. செங்குத்தான மலை. மலையேறும் போது பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இவர்களுக்கு உதவுவதற்காக இந்த பாதையில் மொத்தம் 13 அவசர மருத்துவ சிகிச்சை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் உடனடியாக இவர்கள் பம்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.கொசு தொல்லையை கட்டுப்படுத்த தொடர்ந்து புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பெற்ற உடன், மருத்துவ பரிசோதனை, ஹெல்த் கார்டு பெறும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். சிலருக்கு சின்னம்மை நோய்க்கான அறிகுறிகள் தென் பட்டதை தொடர்ந்து அவர்கள் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.