Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனக்காவலர்கள் இருந்திருந்தால் ... விரைவான தரிசனத்துக்கு சபரிமலையில் ஏற்பாடு விரைவான தரிசனத்துக்கு சபரிமலையில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் சன்னிதான பாதை சாவி தர வனத்துறை மறுப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் சன்னிதான பாதை சாவி தர வனத்துறை மறுப்பு

பதிவு செய்த நாள்

22 நவ
2017
10:11

சபரிமலை: சபரிமலையில் வனத்துறைக்கும், தேவசம்போர்டுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.  பம்பை- சன்னிதானம் பாதையின்  சாவியை தர வனத்துறை மறுத்து வருகிறது. பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் சபரிமலை அமைந்துள்ளது. வனம் தொடர்பான சட்டங்கள் நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வருவது சபரிமலையில் கடுமையாக எதிரொலிக்கிறது. தேவசம் போர்டின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வனத்துறை தலையிட்டு தடை செய்கிறது.

சபரிமலைக்கு குடிநீர் வழங்கும் குன்னாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வளவோ முயன்றும் இன்னும் அதற்கு வனத்துறை தடையாக இருந்து கொண்டிருக்கிறது. இதனால் மழை குறைவாக இருந்தால் மகரவிளக்கு நாளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. திருவேணி பாலம் அருகே இந்த ஆண்டு பலித்தர்ப்பணம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வந்த வனத்துறை, அரசின் கடுமையான நிலைபாட்டால் கார்த்திகை ஒன்றாம் தேதி அனுமதி வழங்கியது.

பொருட்கள் கொண்டுவரும் டிராக்டர்கள் வருவதற்காக பெரிய நடைப் பந்தலின் பின்புறம் 20 மீட்டர் பாதைக்கும், பம்பை பஸ் ஸ்டாண்டில் கேன்டீன் அமைக்கவும் வனத்துறை இடம் கொடுக்க மறுத்து வருகிறது. சாவி மறுப்பு பம்பை - சன்னிதானம் பாதைக்கான வாசலுக்கு இரண்டு சாவிகள் உண்டு. ஒப்பந் தப்படி வனத்துறை மற்றும் தேவசம்போர்டு தலா ஒரு சாவி வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது இரண்டு சாவிகளையும் வனத்துறை வைத்துக் கொண்டு தேவசம் போர்டு க்கு கொடுக்க மறுக்கிறது.

இதுபற்றி தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது: வனத்துறை சபரிமலையில் விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறது. 4 கம்புகள் வை த்து கட்டி பக்தர்கள் தங்கினால் அது ஆக்கிரமிப்பு என்கிறார்கள். பக்தர்களை ஆக்கிரமி ப்பாளர்களாக பார்க்க கூடாது. காடுகளை ஆக்கிரமிப்பது தேவசம்போர்டின் வேலை அல்ல. இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்ப டும் என்றார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar