பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநியில் அபிஷேக பஞ்சாமிர்தம் தயாரிப்பு தினமும் 50 ஆயிரம் டப்பாக்களாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசன் மற்றும் தைப்பூச சீசன்களில் பழநிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் சார்பில் விற்கப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பழநி மலைக்கோயில் பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளது.
தட்டுப்பாடை தவிர்க்க : கடந்த 2013ம் ஆண்டில் டப்பாக்கள் பற்றாக்குறையால் அபிஷேக பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் விதமாக கோயில் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை, தைப்பூச சீசன் நேரத்தில் கூடுதலாக டப்பாக்கள், டின்கள் கொள்முதல் செய்து தயார்நிலையில் வைக்கின்றனர்.
இதுகுறித்து பழநிகோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரை கிலோ டப்பா ரூ.35, டின் ரூ.40 க்கு விற்பனை செய்கிறோம். மலைக்கோயில், உபகோயில் மட்டும் இல்லாமல் பஸ் ஸ்டா ண்ட், ரயில்வே ஸ்டேஷன்களிலும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. சபரிமலை, தைப்பூச சீசன் காலத்தில் சாதாரண நாட்களில் தினமும் 30 ஆயிரம் டப்பாக்கள் வரையும், விடுமுறை நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேலும் பஞ்சாமிர்த டப்பாக்களும் விற் பனை ஆகின்றன. அதற்கேற்ப தேவையான அனைத்தும் கூடுதலாக கொள்முதல் செய்யப் பட்டுள்ளன.” என்றார்.