பொள்ளாச்சி ; பொள்ளாச்சி வெங்கடேசா காலனி சாய் மதுரம் கோவிலில், சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. நேற்றுமுன்தினம், மாலை, 5:30 மணிக்கு வீரேஸ்வரன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.அதில், சாய்பாபா பாடல்கள் பாடப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று மாலை, 6:00 மணிக்கு பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா சமிதியினர் செய்து வருகின்றனர்.