பதிவு செய்த நாள்
22
நவ
2017
05:11
விருத்தாசலம்: சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு காலை மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. காந்தி நகர் நர்த்தன விநாயகர், தெற்கு தெரு யாகசாலை விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை சித்தி விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர், கடலுார் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் செல்வ விநாயகர், வினைதீர்த்த சித்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.