ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகை முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2017 01:11
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளுக்காக இன்று இணையானையர் ஜெயராமன் தலைமையில் முகூர்த்த கால் நடப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் டிச. 3ம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழா நடக்கிறது. அன்று இரவு 8.30 மணிக்கு கோவிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. கார்த்திகை தீபத்திருநாளுக்காக இன்று இணையானையர் ஜெயராமன் தலைமையில் முகூர்த்த கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.