Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் குதிரை வாகனத்தில் ...
முதல் பக்கம் » திருவண்ணாமலை தீப திருவிழா
திருவண்ணாமலையில் நாளை மஹா தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2017
10:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியில் நாளை மஹாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், தீபத்திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான மஹாதீபம், நாளை ஏற்றப்பட உள்ளது.

Default Image

Next News

2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும், மஹா தீபத்திற்கு பயன்படுத்தப்படும்,  ராட்சதகொப்பரையை மலை உச்சிக்கு  தோலில் சுமந்தபடி ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என  பக்தி கோஷத்துடன் கோவில் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.  ராட்சதகொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு முன்  அதிகாலையில் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், பசு மற்றும்  யானை ருக்கு வணங்கியது. இதை முன்னிட்டு, நாளை அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேசுவரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்படும். இதை தொடர்ந்து, அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும். அப்போது, பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பின், ஆண்டுக்கு, ஒரு முறை மட்டும் பக்தர்களுக்கு அருள்பாலித்து, நடனமாடியவாறு மஹா தீப தரிசனத்தை காண, அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன் எழுந்தருள்வார். மலை உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபம், தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், சுற்றுப்பகுதியில், 40 கி.மீ தூரம் வரை மஹா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

 
மேலும் திருவண்ணாமலை தீப திருவிழா »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் தீப திருவிழாவில், குதிரை வாகனத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று மஹா தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாள் 63 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரரர் கோவிலில், நாளை பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஐந்தாம்  நாள் காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar