சபரிமலை: சன்னிதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில் கடந்த முறை பதவியிலிருந்த தேவசம்போர்டு ஸ்ரீகோயிலின் இரண்டு புறமும் இரண்டு ஷெட்டுகள் அமைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது.
திருமுற்றம் முழுவதும் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும் கட்டுமானங்கள் நடத்துவது பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்தியது. மேலும் கோயில் ஆசாரங்களுக்கு எதிரானது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தேவசம்போர்டு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட பத்மகுமார், நிருபர்களிடம் பேசுகையில் திருமுற்றத்தில் தேவையற்ற கட்டுமானங்கள் அப்புறப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதுபற்றி தேவசம்போர்டு கூட்டத்திலும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன் முன்னிலையில் மேல்சாந்தி, தந்திரி அறைக்கு செல்லும் பாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஷெட் அப்புறப்படுத்தப்பட்டது.