பதிவு செய்த நாள்
07
டிச
2017
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடந்து விழாவில், தினமும் காலை, இரவு என, இரு வேளைகளிலும் சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கடந்த, 2ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து, அய்யங்குளத்தில், மூன்று நாள் நடந்த தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்தது. நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தங்க ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்துடன் தீப திருவிழா முடிவடைந்தது. மஹா தீபம், வரும், 12வரை மலை உச்சியில் எரியும்.