பதிவு செய்த நாள்
07
டிச
2017
12:12
திருக்கழுக்குன்றம் அடுத்த திருநிலை கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம், விமரிைசயாக நடந்தது. திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த திருநிலை கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ராகு – கேது, சிவ கணங்களுக்கு நேற்று, அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன் தினம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, பிரேவச பலி நடந்தது. நேற்று காலை, இரண்டாம் காலயாக பூஜையும், தீபாராதைனயும் நடந்தது. காலை, 7:10 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமங்கைள சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.