பதிவு செய்த நாள்
07
டிச
2017
12:12
பழநி : பழநி மலைக்கோயில் சின்னவிநாயகர், அழகுநாச்சியம்மன் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிேஷகம் நடந்தது. பழநிமுருகன் கோயில் சார்ந்த, கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர், அழகுநாச்சியம்மன் கோயிலில் 1999ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், 18 ஆண்டுகளுக்குபின் தற்போது திருப்பணிகள் முடிந்து, நேற்று காலையில் அமர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய சிவாச்சாரியர்கள் கொண்ட குழுவினரால், ேஹாமம் பூஜையுடன், வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, காலை 6:20 மணிக்கு அழகுநாச்சியம்மன், சின்னவிநாயகர் கோபுரகலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிேஷகம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், பழநி அடிவாரம், நகர வர்த்தகசங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.