பதிவு செய்த நாள்
07
டிச
2017
05:12
பண்ருட்டி: பண்ருட்டியில் விநாயகர், பெரியாண்டவர், காமன், அய்யனார், கருமாரியம்மன் ஆகிய ஐந்து கோவில்களின் மகாகும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி வ.உ.சி.தெருவில் உள்ள இடம்புரி விநாயகர் கோவில்,பெரியாண்டவர் கோவில் அவ்வையாம்பாளையம் தெருவில் உள்ள காமன் கோவில், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவில், அய்யனார் கோவில்கள் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி சத்தியமூர்த்தி தெரு அய்யனார் கோவிலில் அமைத்துள்ள யாகசாலையில் பூஜைகள் கடந்த 5 ம்தேதி துவங்கியது.நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கணபதி ேஹாமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று 6 ம்தேதி காலை 2 ம்கால பூஜைகளும், மாலை 3 கால பூஜைகள் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு 4ம் கால பூஜைகள் துவங்கி கலச நீர் ஊர்வலமாக கடம்புறப்பாடாகி காலை 7:30 மணிக்கு இடம்புரி விநாயகக்கும், காமன் கோவிலில் 8:00 மணிக்கும் 8:30 மணிக்கு கருமாரி, அய்யனார் கோவிலுக்கும் மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வம் மற்றும் 29,30,31 வார்டு பொதுமுக்கள் செய்திருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.