பதிவு செய்த நாள்
07
டிச
2017
05:12
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பக்தர்களுக்கு, சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கடலுார்
மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் உலக அமைதி வேண்டியும், இயற்கை
சீற்றங்கள் தணியவும் பரங்கிப்பேட்டை அடுத்த அன்னப்பன்பேட்டை கிராமத்தில்,
ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி
கலச விளக்கு வேள்வி பூஜையை, துவக்கி வைத்தார். துணைத்தலைவர்
முருகுவெங்கட்ராமன், முன்னாள் ஊராட்சி கஸ்துாரி ஜெய்சங்கர், கிராம தலைவர்
கருத்தா பிள்ளை முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் பாலகுமார் வரவேற்றார்.
ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட
உதவிகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் டாக்டர்
செந்தில்குமார் வழங்கினார். விழாவில், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால்,
செல்வராஜ், பார்த்தசாரதி, இளைஞரணி பழனி, மகளிரணி கலையரசி, இன்ஜினியர்
சங்கரன், வட்ட தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜெய்சங்கர் நன்றி கூறினார்.