நவக்கிரக சன்னிதியில் உள்ள சனிபகவான், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில், தலையில் தீப்பிழம்புடன், ‘ஜுவாலை சனி’யாக காட்சி தருகிறார். இவர் அருகில் தனியாக சனீஸ்வரர் காகத்தின் மீதமர்ந்து சிவலிங்க பூஜை செய்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நற்பலன் உண்டாகும்.