திருக்காளஹஸ்தியில் உள்ள காளத்திநாதர் சுயம்பு மூர்த்தம். கண்ணப்பரால் பூஜை, அபிஷேகம் செய்யப்பட்ட மூர்த்தியாதலால், இச்சன்னிதியில் திருநீறு பிரசாதம் வழங்கும் மரபில்லை. அதற்குப் பதிலாக, பச்சைக் கற்பூரத்தை பன்னீரில் கலந்து, அந்த தீர்த்தத்தை சங்கு மூலம் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.