திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2017 11:12
திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் 23-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக கோவில்நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: தொடர் விடுமுறையால் வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி முதல்வாரம் வரையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.