தருமாபுரி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2017 12:12
புதுச்சேரி: தருமாபுரி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சீதாராம திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் (9ம் தேதி) மாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, குப்பஸ்தாபனம், அனுமன் மூல மந்திரஹோமம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், ராமமந்திர ஹோமம், அனுமன் மூலமந்திர ஹோமம், காயத்ரி மகாமந்திர ஹோமமும், காலை 8:00 மணிக்கு திரவுபதியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு சீதாராம திருகல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதில், செல்வகணபதி எம்.எல்.ஏ., மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு மாட வீதி வழியாக சுவாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.