பதிவு செய்த நாள்
12
டிச
2017
12:12
தர்மபுரி: தர்மபுரி புத்திகே மடம் ராகவேந்திர சுவாமி கோவிலில், சமஸ்தான பூஜை நடந்தது. இதில், கர்நாடகா மாநிலம், மைசூர் சோசலே வியாஸராஜ மடத்தின் பீடாதிபதி வித்யாஸ்ரீஷ சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு முத்ராதாரணம் செய்து வைத்தார். தொடர்ந்து, மதியம், 1:00 மணி வரை சமஸ்தான பூஜை நடந்தது. முன்னதாக கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, வித்யாஸ்ரீஷவின் தர்பார் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும், மைசூர் ராமச்சந்திர ஆச்சார் குழுவின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. ஏற்பாடுகளை, தர்மபுரி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் வெங்கடேசன், முரளி சரஸ்வதி, சுபத்ரா சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.