திருமாலின் மார்பினை அலங்கரிக்கும் துளசியை விஷ்ணுவின் மனைவி என்று தேவீ பாகவதம் போற்றுகிறது. திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதத்தோடு துளசி பிறந்ததாக பிரம்ம வைவர்த்த புராணம்கூறுகிறது. லட்சுமியின் அம்சமான துளசி இருக்கும்இடத்தில் விஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எதனோடும் ஒப்பிட முடியாத உயர்வான பொருள் துளசி. ஒருமுறை, சுவாமிக்கு அணிவித்த துளசியைக் கழுவி மீண்டும் ஒருமுறை பூஜைக்குப் பயன் படுத்தலாம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துளசிதீர்த்தம் அருந்தி விரதம் பூர்த்தி செய்வர். துளசி வழிபாட்டைத் துவங்க ஏற்றமாதம் கார்த்திகை. கார்த்திகை சோமவாரம், கார்த்திகை அமாவாசை நாட்களில் துளசியை வலம் வந்து வழிபட விரைவில் திருமணயோகம் உண்டாகும். டிச.10ல் கார்த்திகை கடைசி சோமவாரமும், 12ல் கார்த்திகை அமாவாசையும் வருகிறது.