மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2017 12:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழியை முன்னிட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் டிச.,16 முதல் ஜன.,13 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை சேவார்த்திகளுக்கு திருஞான சம்பந்தர் சன்னதி முன்பாக திருஞானப்பால் வழங்கப்படவுள்ளது. விழா நாட்களில் கோயில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:00 மணிக்கு நடை சாத்தப்படும். பின் மீண்டும் மதியம் 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9:30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் கோயில் நடை சாத்தப்படும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.
* மதுரை கள்ளழகர் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மார்கழியை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன.,13 வரை கள்ளழகர் கோயிலில் அதிகாலை 4:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மதியம் 3:30 முதல் இரவு 7:00 மணி வரையிலும், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் மற்றும் வீரராகவ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 முதல் காலை 11:30 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என துணை கமிஷனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.