திருப்பதி: வருகின்ற 29ம் தேதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் சனிக்கிழமை என்பதாலும் அதன் பிறகு புத்தாண்டு தரிசனம் என்பதாலும், அந்த நான்கு நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை முன்னிட்டு இந்த நாட்களில் ஆர்ஜிதா சேவா உள்ளிட்ட சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. இதே போல முதியோர், உடல் ஊனமுற்றோர், கைக்குழந்தையுடன் கூடிய தாய்மார்கள், நன்கொடையாளர்கள் போன்றவர்களுக்கான சிறப்பு தரிசனமும் கிடையாது. வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் உணவு குடிநீர் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.