Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை ... சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் கார்த்திகை திருவிளக்கு பூஜை சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழபுரத்தில் புதையுண்ட 12ம் நூற்றாண்டு கோயில்
எழுத்தின் அளவு:
சோழபுரத்தில் புதையுண்ட 12ம் நூற்றாண்டு கோயில்

பதிவு செய்த நாள்

14 டிச
2017
11:12

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் புதையுண்ட 12 ம் நூற்றாண்டு கோயிலை தொல்லியல்துறையினர் பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஊரில் சோழ மன்னர் தங்கியிருந்தபோது, வழிபாட்டிற்காக சிவலிங்கம் ஒன்றை நிறுவினார். இதனால் சோழபுரம் எனப் பெயர்பெற்றது. இங்கு புகழ்பெற்ற அருள்மொழி நாதர், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் பின்புறம் வடைகரை காளியம்மன் கோயில் செல்லும் வழியில் பழமையான கோயில் மண்ணில் புதையுண்டும், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி சிலை எதுவும் இல்லை. கோயில் சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இதில் 12 ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்து கல்வெட்டுகளும், 13 ம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டுகளும் கலந்து காணப்படுகின்றன. சமீபகாலமாக கோயில் சுவர்களில் இருந்து, கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன.  கல்வெட்டுகளை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் கோயில் விபரம், மற்றும் தானம், சொத்துக்கள் குறித்து அறியலாம்.

சோழபுரம் சுப. சண்முகசுந்தரம் கூறுகையில், இதனை ஓட்ட மண்டபம் என்று கூறுவோம். அந்த காலத்தில் வேட்டையாட வரும் மன்னர்கள் இந்த மண்டபத்தில் தங்கி செல்வதாக கூறுவர். சிலர் கோயில் என்றும் கூறுகின்றனர். முழுமையாக எங்களுக்கு தெரியவில்லை,” என்றார்.

தொல்லியல்துறையினர் கூறியதாவது: தகவல் அறிந்து கோயிலை கல்வெட்டுகளை ஆய்வு செய்தோம். அவை 12 மற்றும் 13 ம் நூற்றாண்டு பாண்டியர், சோழர் காலத்து கல்வெட்டுகள். பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவை மாறி, மாறியுள்ளதால் படிப்பதில் சிரமம் உள்ளது. முதற்கட்டமாக அவற்றை படி எடுத்துள்ளோம். அவற்றை வாசிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்போது கோயில் குறித்த முழுமையான விபரம் கிடைக்கும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar