பதிவு செய்த நாள்
14
டிச
2017
11:12
சேலம்: அம்மாபேட்டை அடுத்த உடையாப்பட்டியில், கந்தாஸ்ரமம் உள்ளது. இங்கு, 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. அதையொட்டி, காலை கோ - பூஜை, சுதர்சன மாலா மந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முருகனுக்கு விபூதி அலங்காரம் சார்த்துபடி செய்யப்பட்டது. மாலை, வித்யா சங்கர சுவாமிகளின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு சுப்ர மணிய பஞ்ச தஸாக் ஷரி ஹோமம், மாலை, 4:00 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு நவாக் ஷரி மூல மந்திரம், சண்டி ஹோமம், மாலை, 4:00 மணிக்கு சுக்ரவார பிரதோஷ பூஜை, 5:00 மணிக்கு சிறப்பு சங்கீர்த்தனம் நடக்கிறது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, நிகழ்ச்சி நிறைவடையும்.