வால்பாறை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2017 11:12
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 31ம் ஆண்டு மண்டல பூஜை விழா நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கொடியை ராஜகுரு சுப்புராஜ் குருசாமி ஏற்றினார். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. வரும், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை, 3:00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.