ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2017 12:12
உடுமலை: உடுமலை, தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், சங்காபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது.உடுமலை, தில்லை நகரில் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத இறுதி திங்கள்கிழமையையொட்டி, சங்காபிஷேக பூஜை நடந்தது. மாலை, 3:30 மணிக்கு வேள்வியும், 6:00 மணிக்கு சங்காபிஷேகமும் நடந்தன. ரத்தினாம்பிகை சமேத ரத்தினலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.