காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில், சிறப்பு மகா ஹோமம் நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு பல்வேறு பகுதியிகளில் இருந்து வரும் பக்தர்கள் நலனுக்காக, நேற்று கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு மகா ஹோமம் நடைபெற்றது. மேலும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் நலனுடம் இருக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்று 108 மூலிகைப் பொருட்கள் நவதானியங்கள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு ஹோமம் செய்தனர்.பின், பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கொண்டு சிவன், சனி பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சனி பகவான் நிலப்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா, கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.