பெருந்துறை: ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை பெருந்துறையில் நடந்தது.பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில், ஐயப்ப சுவாமி சன்னதியில், விளக்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதன் பின், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விளக்கு பூஜையை முன்னிட்டு, விசேஷ அலங்காரத்துடன் கூடிய ஐயப்ப குடில் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை பெருந்துறை ஐயப்ப பூஜா குழுவினர் செய்திருந்தனர்.