கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே பழனியூரில், பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக, கணபதி பூஜையுடன் துவங்கி, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ ஆராதனைகளுக்குப்பின், பூர்ணாகுதி, கடம் புறப்பாடுடன் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வடமதுரை: சிங்காரக்கோட்டையில் விநாயகர், நாகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை புனித நீர், தீர்த்தக்குடங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துபட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.