பதிவு செய்த நாள்
23
டிச
2017
11:12
ஒரகடம் : ஒரகடம் அருகே, உமையாள்பரணஞ்சேரியில், இடிந்த நிலையில் உள்ள பழமையான சிவன் கோவிலை சீரமைத்து, புதிதாக கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வலையகரனை ஊராட்சியில், உமையாள் பரணஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, சிதிலமடைந்து, முற்றிலும் இடிந்த நிலையில் சிவன் கோவில் காணப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படும் இக்கோவிலின் தல வரலாறு, யாருக்கும் தெரியவில்லை. ஆனால், உமையாள் அம்மனை குறிக்கும் வகையில், இந்த ஊருக்கு உமையாள்பரணஞ்சேரி என, பெயர் வந்ததாக முதியோர் தெரிவிக்கின்றனர்.சுற்றியுள்ள நிலங்கள், பிளாட்டுகளாக மாறி வருவதால், கோவிலை சீரமைக்க யாரும் முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.தற்போது, எஞ்சியுள்ள கல் துாண்களில், சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர் இதை ஆய்வு செய்ய வேண்டும். வசதி படைத்த சிவ தொண்டர்கள், கோவிலை சீரமைத்து, புதிதாக கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.