பதிவு செய்த நாள்
23
டிச
2017
12:12
திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலில், மாணிக்கவாசகரின், பத்து நாள் உற்சவம் நாளை துவங்குகிறது. திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, சிவ பெருமானின், வான்மீக நாதர் சன்னதியும், அற்புதமான நடராஜர் திருமேனி தனி சன்னதியும் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கந்தன் விழாவோடு, சமய குறவர் மாணிக்க வாசகர் விழாவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான, 10 நாள் உற்சவம் நாளை காலை, 6:30 மணிக்கு துவங்குகிறது. இதில், காலை, 5:00 மணிக்கு மாணிக்க வாசகருக்கு மஹா அபிஷேகமும், அதையடுத்து வீதியுலாவும் நடைபெறும்.எதிர்வரும் புத்தாண்டு, இரண்டாம் தேதி, 10ம் நாள் உற்சவமாக ஆரூத்ரா விழாவும் விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் நடராஜர், சிவகாமி தாயாருடன், மாணிக்கவாசகரும், திருப்போரூர் மாடவீதிகளில் வலம் வருவர்.