பதிவு செய்த நாள்
02
ஜன
2018
02:01
பல்லடம் :“திருவருளை காட்டிலும், குருவருளே மிகவும் உயர்ந் தது,” என, பல்லடத்தில் நடை பெற்ற மார்கழி உற்சவ விழாவில், சிவாச்சல அடிகளார் பேசினார். சத்யசாய் சேவா சமிதியுடன், பல்லடம் ஆன் மிக பேரவை இணைந்து, பொங்காளியம்மன் கோவிலில், மார்கழி உற்சவ பெருவிழாவை நடத்தி வருகிறது. தினசரி பஜனை, சொற்பொழிவு, மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, வரன்பாளை யம் சிவாச்சல அடிகளார் ‘இன்பத்துறையில் எளியர் ஆனார்’ எனும் தலைப்பில் பேசியதாவது:சொற்பொழிவு என்பது கடினமான கலை. அரட்டை அடிப்பது என்பது வேறு. கேட்பவர்களின் நேரத்தை வீணடிக்காமல், உபயோகமான கருத்துக்களை கூறுவதே சொற்பொழிவு. அது வெறும் நகைச்சுவையாகி விடக்கூடாது. பயனற்ற சொற்களை பேசுபவர்கள், மனித உருவம் கொண்டிருந்தாலும், அவர்கள் மனிதர் அல்ல. திருவருளை விட குருவருளே சிறந்ததாகும். அடியார்கள் வரலாற்றை சொல்வது பெரியபுராணம். அரிய சொற்களை சொல்பவர்களையே பெரியவர் என்பர். அவ்வாறு அடியவர்களாகிய, பெரியவர்களால் உருவானதே பெரியபுராணம் எனப்படுகிறது. இறை வன் மீது பற்று இருந்தால், கெட்ட செயல்கள் அனைத்தும் மறைந்துவிடும். இவ் வாறு அவர் பேசினார். முன்னதாக சத்யசாய் பஜனை நிகழ்ச்சியும், இடுவாய் ஆறுமுகம் காவடி குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.