பதிவு செய்த நாள்
02
ஜன
2018
05:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடராஜர் பெருமாள், சிவகாமியம்மனுடன் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் பெருமாள், சிவகாமியம்மனுடன் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜையின் போது பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கார்த்திகை தீபத்தில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப நெய்யை முலிகை பொருட்களுடன் சேர்த்து “மை”யாக மாற்றி முதலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, ஆயிரம் கால் மண்டபத்தில், நடராஜர் பெருமானுக்கு சிவாச்சாரியார் வைத்தார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜர் பெருமாள், சிவகாமியம்மனுடன் எழுந்தருளி மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.