ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 2:30 மணிக்கு நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்டிபகலிங்க பூஜை, கால பூஜை நடந்தது. பின் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் பல்லக்கில் புறப்பாடாகி நடராஜர் சன்னதி முன்பு எழுந்தருளினார். பின் நடராஜருக்கு அபிேஷகம் செய்தனர். தங்க கவச அலங்காரத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார்.