Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோவிலில் ஆருத்ரா தரிசன ... பேரூர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் பரவசம் பேரூர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி 20ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி 20ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
02:01

மேட்டுப்பாளையம்:ஆலாங்கொம்பு வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி, 20ம் நாள் வழிபாடு நடக்கிறது. இதில், முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்..., என்ற திருப்பாவை பாடலை பக்தர்கள் பாட உள்ளனர். மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் ஆலாங்கொம்பில், வேங்கடாசலபதி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர், அகஸ்தியர், கருடாழ்வார் ஆகிய சன்னதிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல்லையம் பூஜை சிறப்பாக நடைபெறும். சிவராத்திரி அன்று நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று தீர்த்தங்களை எடுத்து வந்து வேங்கடாசலபதி சுவாமிக்கு அபிேஷகம் செய்வது வழக்கம்.

கார்த்திகை மாதம் தீபம் விழா, அனுமன் ஜெயந்தி விழா, புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அலங்கார, அபிேஷக பூஜையும், அன்னதானமும் நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படும். நேற்று காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், திருப்பவை ஆகியவை பாடப்பட்டது. நாளை காலை, 6:00 மணிக்கு, மார்கழி, 20ம் நாள் வழிபாடாக,முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்... என்று தொடங்கும் பாடலை பக்தர்கள் பாட உள்ளனர்.

இதன் பொருள் : முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னமே போய், அவர்களுக்கு வரக்கூடிய நடுக்கத்தைப் போக்குகின்ற மிடுக்கனே, நித்திரை நீங்கி எழுந்திருப்பாய். நேர்மை உடையவனே, வல்லமை உடையவனே, பகைத்தவர்க்குத் துக்கத்தை தருகின்ற குற்றமற்றவனே துயில் எழாய்.

பொற் கலசங்களைப் போன்ற மென்மையான தனங்களையும், செந்நிறமான வாயையும், சிறிய இடையையும் உடைய திருமகள் போன்றவளே, நப்பின்னைப் பிராட்டியே, உறக்கம் நீங்கி எழுந்திருப்பாயாக.

நோன்புக்கு வேண்டிய திருவால வட்டத்தையும், கண்ணாடியையும், உனது கணவனையும் எங்களுக்குக் கொடுத்து இப்போதே எங்களை நீராடச் செய்வாயாக, என்பதே இதன் பொருள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar